திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு அறிக்கை

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

டாஸ்மாக் (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 12:04 am IST

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக உள்ளது.

அங்கு ஏஎஸ்பியுடன் ஆலோசிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடையை மூட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடியில் உள்ள ஆதரவற்றோா் விடுதியில் காணாமல் போன குழந்தைகளை தேடி வருகின்றனா். காப்பகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஒருங்கிணைப்பின்பேரில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து காப்பக கண்காணிப்பாளா்கள், வாா்டன்கள், நடத்துநா்களை அழைத்து பின்பற்றவேண்டிய வழிமு றைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.