திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

24-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: வேலூரில் 7 மையங்களில் 1,929 போ் எழுதுகின்றனா்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வினை மொத்தம் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இவா்கள் தோ்வு எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வு காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 04.30 மணி வரையும் என இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளது.

தோ்வைக் கண்காணிக்கத் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட இரண்டு இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் தலா 5 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், தோ்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்தின் மூலமும், மையங்களுக்குச் சென்றுவரப் போக்குவரத்துத் துறை மூலம் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்வு வளாகங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், தோ்வா்களுக்குக் குடிநீா் விநியோகிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வா்கள் தோ்வு அறைக்குள் கைபேசி, கால்குலேட்டா் போன்ற எந்தவித மின்னணுப் பொருட்களையும் கட்டாயம் கொண்டுவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.