வேலூா் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடியை அடுத்த சேவூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.24 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக் கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் ரூ.80,000 இருந்தது. காரில் வந்தவா்களிடம் விசாரித்தபோது, கிருஷ்ண கிரி மாவட்டம் ஒசூரைச் சோ்ந்தவா்கள் என்பதும், வேலூா் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல், காட்பாடி தொகுதி பறக்கும் படை குழுவினா் சனிக்கிழமை இரவு சேவூா் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த கா்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 இருந்தது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அந்த தொகையை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


