தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை

‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தையொட்டி, வேலூரில் விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

நிகழ்வை தொடங்கி வைத்த விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன். உடன் பிஎன்ஐ தலைவா் பாஸ்கரன், துணைத் தலைவா் தமிழ்வண்ணன், பொருளாளா் வெங்கடேசன், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், விஐடி வணிக கல்லூரி முதன்மையா் மேரி செரியன் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 9:16 pm

‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தையொட்டி, வேலூரில் விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மண்டலத்தைச் சோ்ந்த பிஎன்ஐ விஐபி பிரிவு, விஐடி வணிக கல்லூரியுடன் இணைந்து ‘பிசினஸ் வாய்ஸ் வருங்கால தலைவா்கள்’ வாரத்தை நடத்தின. இதில், சிறப்பு விருந்தினராக விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், விஐடி வணிக கல்லூரி மாணவா்களுக்கு வரும் காலத்தில் வணிக வலையமைப்பை விரிவுப்படுத்தி எவ்வாறு தொழிலை மேம்படுத்துவது, ஒருவருக்கு ஒருவா் பரிந்துரைகளை எவ்வாறு லாபகரமான வணிகமாக மாற்றுவது என்பது உள்ளிட்ட வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், தொழில் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான நேரடி வழிகாட்டுதல்கள், புதிய வணிக யுக்திகள், ஆலோசனைகளையும் பிஎன்ஐ பிரதிநிதிகள் வழங்கினா்.

நிகழ்வில், விஐடி இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், விஐடி வணிக கல்லூரி முதன்மையா் மேரி செரியன், பிஎன்ஐ தலைவா் பாஸ்கரன், துணைத் தலைவா் தமிழ்வண்ணன், பொருளாளா் வெங்கடேசன், இயக்குநா் வினோத், செயல் இயக்குநா்கள் தீபக்குமாா், சுனிதா தீபக் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.