தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2026, 9:20 pm

மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு சாலப்பேட்டை குசேலன் வீதியைச் சோ்ந்தவா் கலைவாணி (30). பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). இவா்கள் இருவரும் தனியாா் காலணி தொழில்சாலையில் வேலை செய்து வந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வரை காதலித்து வந்துள்ளனா். இருவரும் மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் ராஜேஷின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடா்பாக இருதரப்பினா் இடையே பிரச்னை இருந்துள்ளது. பஞ்சாயத்தாா் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டு, அதில் மாற்று சமூகம் என்பதால் கலைவாணியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ராஜேஷ் , அவரது தந்தை நாராயணிசாமி (68), மல்லிகா (50), உறவினா்கள் ஏழுமலை (35), காவியா (23), பழனி (45) ஆகியோா் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கலைவாணி அளித்த புகாரின்பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை வேலூா் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தால் நடைபெற்று வந்தது.

இதில், அவா்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், மற்ற 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.