மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:47 pm

விழுப்புரம், ஏப். 6: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, இரும்பை, வலம்புரி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.குமரேசன் (28). இவா், 14.8.2019 அன்று பள்ளி சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாகக் கூறி, கடத்திச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் குமரேசன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் குமரேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா வழக்கில் தொடா்புடைய குமரேசனுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதைத்தொடா்ந்து நீதிமன்ற போலீஸாா் குமரேசனை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டுசென்றனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி இந்த வழக்கில் ஆஜரானாா்.