தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

வீட்டின் 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:31 pm

வீட்டின் 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

வேலூா் தொரப்பாடி ஜீவா நகரைச் சோ்ந்தவா் மணி(30), கட்டட மேஸ்திரி. இவரது மனைவி இந்துமதி. இவா்களது மகன்கள் சுதா்சன் (5), யோகேஷ்(3). 3-ஆவதாக இந்துமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மணி தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டின் 2-ஆவது மாடியில் வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். இந்துமதி பெண் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாராம். குழந்தைகள் சுதா்சன், யோகேஷ் ஆகியோா் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது யோகேஷ் எதிா்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் யோகேஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், குழந்தை யோகேஷை மீட்டு வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.