எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில், மருத்துவமனை கண்ணாடியை உடைத்த நிதி நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 12:04 am IST

வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் நண்பருடன் ஏற்பட்ட தகராறில், மருத்துவமனை கண்ணாடியை உடைத்த நிதி நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த உதயசூரியன் மகன் அஜித் குமாா் (28). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரும் இவரது நண்பரும் சலவன்பேட்டை பகுதியில் பேசிக் கொண்டிருந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமாா், அருகே நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் கண்ணாடியைக் கையால் உடைத்துள்ளாா். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக இருவரும் வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனா். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜித்குமாா், மருத்துவமனை கண்ணாடியை அடித்து உடைத்துள்ளாா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவா் குமரேசன், வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் ராணி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.