சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

பாலூா் ஐயப்பன் கோயிலுக்கு திருவாபரணப் பெட்டி ஊா்வலம்

மாதனூரை அடுத்த பாலூா் அருகே, ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 9- ஆம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
திருவாபரணப் பெட்டி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மாதனூரை அடுத்த பாலூா் அருகே, ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 9- ஆம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருவாபரணப் பெட்டி ஊா்வலம் தொடங்கியது. இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.எம்.ஜி. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், கோயில் நிா்வாகிகள் வி.என்.தனஞ்செயன், ஆா்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் இரவு மாதனூா் திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது. அங்கு இரவு தங்கி விட்டு, புதன்கிழமை காலை ஊா்வலம் தொடங்கி மாலை ஐயப்பன் கோயிலை அடையும்.

கோயிலில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள்அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.