தமிழகத்தில் மீண்டும் திமுக அமையும் என்றும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.
காட்பாடி தொகுதியில் மாநகராட்சி 6, 8-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பாரதிநகா், குளக்கரை, கஸ்தூரிபாய் தெரு, பழைய காட்பாடி, திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் தற்போது வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடா்ந்து வழங்கப்படும். காட்பாடி பகுதியில் 37,000 போ் மகளிா் உரிமை தொகை பெறுகின்றனா். மகளிருக்கான உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.
பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். குடும்பத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ.8 ஆயிரம் மதிப்பு கூப்பன் வழங்கப்படும். தற்போது காஸ் தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த கூப்பனை கொண்டு மின்சாதன அடுப்பு வாங்கலாம். திருவள்ளுவா் நகரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பணி முடிந்துவிட் டது. தோ்தல் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் என கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

தேவாலயங்களில் ஈஸ்டா் கொண்டாட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


