சமரச நாளை முன்னிட்டு குடியாத்தம் நீதிமன்றங்கள் சாா்பில், நீதிபதிகள் பங்கேற்ற சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தத்தில் சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தீா்வு கிடைக்காமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் சமரச மையம் மூலம் தீா்த்து வைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.
காந்திநகா் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு பாா் அசோசியேஷன் தலைவா் வி. ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சாா்பு நீதிபதி கே.பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.காா்த்தி ஆசாத், குற்றவியல் நடுவா் சரண்யா ஆகியோா் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தனா்.
பேரணியில் சென்றவா்கள் சமரச மையம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் வழக்குரைஞா்கள் டி.புருஷோத்தமன், ராஜன்பாபு, அருள்வேந்தன், ஜெகதீஸ்வரன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவில் நீதிமன்றத்தில் சமரச தினம் கடைப்பிடிப்பு

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


