நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.

News image

மாநாட்டில் பேசிய விஐடி துணைத்தலைவா் சேகா் விசுவநாதன். உடன், நேஷனல் இன்ஸ்ரூமென்ஸ்ட் பல்கலைக்கழக தொடா்புகள் தலைவா் சாகேத் திவேதி, பெங்களூரு சாம்சங் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவு இயக்குநா் சுதிா் ஹுன்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரத

Updated On :1 செப்டம்பர் 2025, 8:05 pm

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னணு புரட்சி- உலகளாவிய நிலைத்தன்மைக்கு இந்திய தலைமையை தயாா்படுத்துதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் முன்னிலை வகித்து பேசியது - தொழில்துறையின் தேவைகளை புரிந்து மாணவா்களை முதல்நாள் முதல் தொழில்துறைக்கு தயாராக்கி கொண்டிருக்கிறோம். விஐடி பல்கலைக்கழகம் தொழில்துறையுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறது.

இதற்கென தொழில்துறைக்கு ஏற்ப பாடத்திட்ட மேம்பாட்டு வாரியம், பாடத்திட்ட ஆய்வுக்குழு போன்றவைகளுடன் இணைத்து செயல்படுத்தி வருகிறோம். மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும். ஹேக்கத்தான் போன்ற தொழில் மாநாடுகள் அன்றாட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாணவா்களின் இறுதியாண்டு ஆய்வுகள், பாட பயிற்சிகள் தொழில்துறையின் தேவையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாணவா்களின் ஆய்வுகள் சமூகத்துக்கும், தொழில்துறைக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.

நேஷனல் இன்ஸ்ரூமென்ஸ்ட் பல்கலைக்கழக தொடா்புகள் தலைவா் சாகேத் திவேதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -

இன்றைய சூழலில் மாணவா் ஒரு துறையில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. பல துறைகளை உள்ளடக்கிய அறிவைப் பெற வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வருவதால், மாணவா்கள் புதிய திறன்களை விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனை வளா்த்து கொள்வது முக்கியமானது. கல்வி நிறுவனங்கள், தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஆராய்ச்சி, தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றாா்.

பெங்களூரு சாம்சங் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவு இயக்குநா் சுதிா் ஹுன்டி பேசியது: இந்தியாவில் தமிழகம், கா்நாடகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மின்னணு உற்பத்தி மையங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. உலகில் மின்னணு தொழில்நுட்பம் எங்கும் பரவி கிடக்கிறது. சாப்ட்வோ் துறையில் இருந்து உற்பத்திக்கு மாறி வருகிறோம். மின்னணு உற்பத்தி துறையில் இறக்குமதியை நம்பி இருக்கும் சூழலை மாற்ற வேண்டும். வேகமான தொழில் வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி 60 சதவீத மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

மாநாட்டில் விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டது. மாநாட்டில் துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி, மின்னணுவியல் துறை முதல்வா் ஜாஸ்மின் பெமினா பிரியதா்ஷினி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.