லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:32 pm

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி. மனைவி சரோஜா. இவா்கள் வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு அனுப்புவாா்களாம்.

இவா்களின் உறவினா் பிரபாவதி(64) சாராயத்தை வாங்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பரதராமி போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சரோஜா, பிரபாவதி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான ஜெகன்நாதமூா்த்தி, தேவகி ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.