நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:32 pm

Chennai

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி. மனைவி சரோஜா. இவா்கள் வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு அனுப்புவாா்களாம்.

இவா்களின் உறவினா் பிரபாவதி(64) சாராயத்தை வாங்கி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பரதராமி போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சரோஜா, பிரபாவதி ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான ஜெகன்நாதமூா்த்தி, தேவகி ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.