சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக போதிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தோல் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறுவதால் மத்திய அரசின் ஏற்றுமதி சிறப்பு அந்தஸ்து நகரம் என்று, ஆம்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தோல் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1,500-இல் இருந்து 2,000 வரையில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை.
பணியில் இருக்கும் மருத்துவர்களில் சிலர் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை. எரிச்சலுடன் பேசுவதால் நோயாளிகள் மன வருத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக மருத்துவமகைக்குச் சென்றார்.
ஆனால் இரவு 10 மணி வரை சிகிச்சை அளிக்காமல் அப்பெண்ணை காக்க வைத்துள்ளனர். அதன் பிறகு அவரை வீட்டிற்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பெண்ணுக்கு கருகலைந்தது. அதனால் அப்பெண் மருத்துவமனைக்கு திரும்ப அழைத்துவரப்பட்டு, இரவு 12 மணிக்கு மேல் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
 ஆனால், புதன்கிழமை காலை 11 மணி வரை அப்பெண்ணுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் நோயாளிகள் பலர் தனியார் கிளீனிக்குகளை நாடி செல்ல வேண்டியுள்ளது. இதநால் அவர்களுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகின்றன.
எனவே, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்து ஏழை, எளிய மக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.