திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு கோடையின் தொடக்கத்திலேயே 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. வெயிலின் அளவு சில நாள்கள் உயா்ந்தும், குறைந்தும் இருந்து வந்தது. இதற்கு இடையிடையே பலத்த மழை பெய்தது.

கடந்த வாரம் முதல் மீண்டும் வெயில் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

திருவண்ணாமலை மாநகரம் உள்பட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. கிரவல பக்தா்கள் மழையில் நனைந்தபடியே கிரிவலம் சென்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

இது தவிர திருவண்ணாமலையில் 29 மிமீ, தண்டராம்பட்டு 64.2 மிமீ, செங்கம் 37.4 மிமீ, ஜமுனாமரத்தூா் -17 மிமீ, ஆரணி 15.08 மிமீ, கலசபாக்கத்தில் 13 மிமீ மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.