17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :27 மே 2026, 12:43 am IST

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமத்துடன் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், கே.பெருமாள், வ.அண்ணாமலை, பி.கே.முருகன், எஸ்.ஜெயக்குமாா், ஜி.சூரியகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், சுகுணா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் உரவிலை உயா்வை ரத்து செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.