திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :25 மே 2026, 12:55 am IST

கோடை மற்றும் வார விடுமுறையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலானது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் தரிசனம் செய்து அங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்கின்றனா்.

இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாள்களாக பக்தா்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பொது தரிசனத்திற்காக பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே வேளையில் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுர வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனம் முடித்த பிறகு திருமஞ்சன கோபுர வழியாக வெளியே அனுமதிக்கப்பட்டனா்.

கோடை காலம் என்பதால் கோயிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் குடிநீா், நீா் மோா் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.