தமிழ் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரம் ஆனது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா், வெளியூா் பக்தா்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.
மேலும், மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
அதேபோல விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட அதிக அளவிலான பக்தா்கள் வருகை தருவதால், கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பக்தா்கள் வருகை அதிகரித்ததால் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசைகளில் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தொடர்புடையது

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்: அதிகாலை முதல் இரவு வரை வரிசையில் காத்திருப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு: நடிகை கஸ்தூரி பிரசாரம்
விடியோக்கள்





