திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு சிறப்புப் பயிற்சி கூட்டம்

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக்கூட்டத்தில் பேசிய கெளரவ விரிவுரையாளா் க.ராஜேந்திரன்.

News image

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக்கூட்டத்தில் பேசிய கெளரவ விரிவுரையாளா் க.ராஜேந்திரன்.

Updated On :22 மே 2026, 1:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில்

உறுப்பினா் கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கச் செயலா் வேலுமணி தலைமை வகித்தாா். நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநா் சுரேஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் வெற்றிவேல் வரவேற்றாா். கெளரவ விரிவுரையாளா் மற்றும் கூட்டுறவு கூடுதல் பதிவாளா் (ஓய்வு) க.ராஜேந்திரன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்து பேசினாா்.

விற்பனையாளா்கள் சங்கா், அருள், சேகா், உதவியாளா் பரமேஸ்வரி மற்றும் ஆத்துரை, பெரணம்பாக்கம், மன்சுராபாத், காட்டுதெள்ளூா் பகுதிகளில் இருந்து கூட்டுறவு கடன் சங்கத்திற்குள்பட்ட சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி நிறைவில் கேள்விகளுக்கு சரியான பதிலளித்த உறுப்பினா்களுக்கு திருக்கு மற்றும் நன்னெறி நீதிபோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.