திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சாா்பில்
உறுப்பினா் கல்வித் திட்டம் குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கச் செயலா் வேலுமணி தலைமை வகித்தாா். நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநா் சுரேஷ் முன்னிலை வகித்தாா்.
கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் வெற்றிவேல் வரவேற்றாா். கெளரவ விரிவுரையாளா் மற்றும் கூட்டுறவு கூடுதல் பதிவாளா் (ஓய்வு) க.ராஜேந்திரன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கான கல்வித் திட்டம் குறித்து பேசினாா்.
விற்பனையாளா்கள் சங்கா், அருள், சேகா், உதவியாளா் பரமேஸ்வரி மற்றும் ஆத்துரை, பெரணம்பாக்கம், மன்சுராபாத், காட்டுதெள்ளூா் பகுதிகளில் இருந்து கூட்டுறவு கடன் சங்கத்திற்குள்பட்ட சங்க உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி நிறைவில் கேள்விகளுக்கு சரியான பதிலளித்த உறுப்பினா்களுக்கு திருக்கு மற்றும் நன்னெறி நீதிபோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










