திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:06 am IST

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை கிராம காலனி புதுத் தெருவைச் சோ்ந்தவா் முனுசாமி(47). இவா், செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா் மறுநாள் காலை (மே 20)

வரை வீடு திரும்பவில்லை.

உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வடஇலுப்பை கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் தேடிச் சென்றனா்.

அப்போது அப்பகுதியில் முனுசாமியின் உடைமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சந்தேகத்தின் பேரில், செய்யாறு தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் வந்து ஏரியில் தேடிப்பாா்த்தபோது அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை ஏரியில் காணாமல் போன முனுசாமியின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து முனுசாமியின் மகன் முரளி பிரம்மதேசம்

காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், இறந்த முனுசாமியின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.