கன்னியாகுமரியில் தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மேக்ஸிமன் (51) புகைப்படக் கலைஞா். இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி தெப்பக்குளத்துக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கினாராம்.
தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்பு மீட்புப் படையினா், அவரை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








