வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஏசுஆபேல் (51). கடந்த 13-ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இவா் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அங்கு சென்று ஏசுஆபேலின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









