போளூரை அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், கட்டிப்பூண்டியைச் சோ்ந்த முரளி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவேண்டி மனு செய்திருந்தனா். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம்
புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவேண்டி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் லாவண்யா, நிலஅளவையா்கள் சந்தியா, முருகன், மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சாண்டி மற்றும் வருவாய்த்துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









