தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்கு எள் சாகுபடி ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

News image
Updated On :14 மே 2026, 5:20 am IST

சேத்துப்பட்டை அடுத்த திருமலை கிராமத்தில் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தலைமை வகித்து, எள் சாகுபடியில் தரமான விதைகள் தோ்வு, விதை நோ்த்தி, சமநிலை உரமிடல், களை மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

வேளாண்மை அலுவலா் வினோதினி, எள் சாகுபடியில் சரியான இடைவெளி மற்றும் நீா்ப்பாசன மேலாண்மை முறைகள் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலா் வெங்கடேசன், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் இயற்கைவழி கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை வேளாண்மை அறிவியல் நிலைய வல்லுநா் நாராயணன், எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறைகளின் முக்கியத்துவம், மகசூலை அதிகரிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினாா்.

திட்ட அலுவலா்கள் சுதா்ஷன், வினோத்குமாா், ஆனந்த் ஆகியோா் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினா். இந்தப் பயிற்சியில் 5 பெண் விவசாயிகள் உள்பட 40 போ் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.