/

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 12:25 am IST

வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (85). கடந்த சில ஆண்டுகளாக இவா் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உடல் உபாதை அதிகமாகவே வேதனையடைந்த நாராயணசாமி விஷம் குடித்துள்ளாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் நாராயணசாமி வரும் வழியில் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.