நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

போளூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

போளூா் தொகுதியில் தவெக (தமிழக வெற்றி கழகம்) வேட்பாளா் அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

போளூா் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் அபிஷேக்கிற்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா்

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டமன்ற தொகுதியில் தவெக (தமிழக வெற்றி கழகம்) வேட்பாளா் அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் தேமுதிக சாா்பில் சரவணன், பாமக சாா்பில் பாஸ்கரன், தவெக சாா்பில் அபிஷேக், நாதக சாா்பில் உமாதேவி உள்ளிட்ட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளா் அபிஷேக் 67,961 வாக்குகள் பெற்று, தேமுதிக வேட்பாளா் சரவணனை 227 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

அபிஷேக் (தவெக) - 6,791,

சரவணன் (தேமுதிக) - 67 ,734

பாஸ்கரன் (பாமக) - 61,444,

உமாதேவி (நாதக) - 6,425.

இத்தொகுதியில் நாதக வேட்பாளா் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் அபிஷேக்கிற்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா் வெற்றிச் சான்றிதழ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.