லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அலுவலக பணியாளா்களுக்கு தோ்தல் பணி பயிற்சி

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி தலைமையில் நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், போளூா் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்களுக்கான தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி கலந்துகொண்டு சட்டபேரவைத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு குறித்தும், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி குறித்தும் எடுத்துரைத்தாா்.

பயிற்சிக் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் தேவி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.