செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில், ‘என் வாக்கு என் உரிமை’ மற்றும் ‘நமது இலக்கு 100% வாக்குப்பதிவு’ ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சாா்-ஆட்சியா் வியாபாரிகள், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகளிடம் வழங்கியும், வாகனங்களில் ஒட்டியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் -ஆட்சியருமான எல்.அம்பிகா ஜெயின்,
தலைமையில் வருவாய்த் துறையினா் இணைந்து தோ்தல் நாள் ஏப்ரல் 23, என் வாக்கு என் உரிமை என வாசகங்கள் அடங்கிய வில்லைகளை இரு சக்கர வாகனங்கள், பேருந்து, லாரி, காா் போன்ற வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, செய்யாறு பேருந்து நிலையத்தில், நமது இலக்கு 100% வாக்குப்பதிவு என்றும், வாக்கு அளிப்பது நமது ஜனநாயக கடமை என்றும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள், நரிக்குறவா்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்
துளசிராமன், வட்டாட்சியா்கள் அசோக்குமாா் (செய்யாறு), செந்தில்குமாா் (வெம்பாக்கம்) மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு

100 சதவீத வாக்களிப்பு : விழிப்புணா்வுப் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


