தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக

News image

பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு நடைபொ்ற சிறப்பு அபிஷேகம்.

Updated On :16 மார்ச் 2026, 9:22 pm

ஆரணி: பங்குனி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி அரிசி, மாவு, மஞ்சள் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், பல்வேறு விதமான வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காண்பித்தனா்.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.