வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக எரிவாயு உருளைகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கும் வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.
மேலும், விற்பனைக்காக தயாரிக்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் தயாரிக்க முடியாததால் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வணிக எரிவாயு உருளை அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாற்றாக, 4 மின் சாதன அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அண்மையில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த மின்சாதன அடுப்புகள் லட்டு, அதிரசம், முறுக்கு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு: நடிகை கஸ்தூரி பிரசாரம்

கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் திரி, மின் அடுப்புக்கு மாறும் தேநீா் கடைகள்

பாமக வேட்பாளா் பட்டியலுடன் அருணாசலேஸ்வரா் கோயிலில் செளமியா அன்புமணி தரிசனம்

சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


