மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல்

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட மின் அடுப்புகளுக்கு சம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெற்ற பூஜை.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:01 pm

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக எரிவாயு உருளைகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கும் வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், விற்பனைக்காக தயாரிக்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் தயாரிக்க முடியாததால் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வணிக எரிவாயு உருளை அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாற்றாக, 4 மின் சாதன அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அண்மையில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த மின்சாதன அடுப்புகள் லட்டு, அதிரசம், முறுக்கு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.