லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image

பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

Updated On :1 மார்ச் 2026, 6:59 pm

மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

பிரதோஷ பூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள்

அரிசி, மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், தேன், பழம், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.