செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட 53 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வியாபாரியை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் சரகத்தைச் சோ்ந்த அழிஞ்சல்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையிலான போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தூசி காவல் உதவி ஆய்வாளா் டி.கண்ணபிரான் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே இருந்த காா் ஷெட்டில் இருந்து போதைப் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் காா் ஷெட்டை சோதனையிட்டு, அங்கிருந்த
ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 53 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து வியாபாரியான ஜான் ஆலம்கான் (81) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


