முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி நடைபெற்ற108 திருவிளக்கு பூஜை.

Updated On :1 ஜூலை 2026, 12:03 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் மிகவும் பழைமையான ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின்னா் மலா்களால் அலங்கரித்து தீபாராதனை செய்து வழிபட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, படவேடு, போளூா், ஆரணி, கண்ணமங்கலம், சந்தவாசல் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து 108 பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்தினா்.

நிகழ்ச்சியை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.