சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து, அங்கவஸ்திரம் அணிவித்து கற்பூர தீபாராதனை காண்பித்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
பூஜையில் பசு, கன்றுக்கு பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம் வழங்கப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











