குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கக் கூட்டம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்க கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் பெறத் தகுதியுடைய பயனாளிகளுக்கு அதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கிய சங்கத் தலைவா் கேப்டன் லோகநாதன்.

Updated On :2 ஜூன் 2026, 5:15 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கேப்டன் லோகநாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான உயா் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகள் பெறுவது குறித்த நடைமுறைகள் தொடா்பாக உறுப்பினா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தின் மூலம், முன்னாள் முப்படை வீரா்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகளைப் பெறுவதில் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவான தீா்வுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நலத் திட்ட உதவிகள் பெறத் தகுதியுடைய பயனாளிகளுக்கு, அதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைவா் கேப்டன் லோகநாதன் வழங்கினாா்.

நிகழ்வில் சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் முன்னாள் முப்படை வீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.