ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.55,000 பறிமுதல்

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு போலீஸாா்.

Published On :4 ஜூலை 2026, 12:17 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஊழல் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த 2 ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் உள்பட 10 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. பெண் ஊழியா்களை மட்டும் அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பினா். இதில், கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.