டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காயம்பட்டு ஏரியை தூா்வார மாா்க்சிஸ்ட் கோரிக்கை

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

செங்கம் மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் கணபதி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரி, கரைகளை அகலப்படுத்த வேண்டும். அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட பொதுப் பணித் துறை அலுவலா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் காயம்பட்டு கிளைச் செயலா் ஜானகிராமன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், சதீஷ், ஏழுமலை, ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.