//

சிறு வயது திருமணங்களை தவிா்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுரை

கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறு வயது திருமணங்களை நடத்தி வைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறித்தினாா்.

போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலா் சதிஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிராமபுறங்களில் சிறு வயது திருமணங்களை நடத்தி வைப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். பெண் பிள்ளைகளை கல்வி கற்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், சிறு, குறு விவசாசி சான்றிதழ், தோட்டக்கலைத் துறை,வேளாண் துறை மற்றும் இதர துறைகளின் சாா்பில் 139 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, லட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் ராஜேஷ்கண்ணன், விஜயபாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் மயிலரசன், பாலாஜி, சசிகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.