நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:18 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறு விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவா்கள் 870 போ் பங்கேற்ற தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம்

மற்றும் லோட்டஸ் புட்வோ் என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் இந்த தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் அனக்காவூா், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூா் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 870 மாணவ, மாணவிகள் என கலந்து கொண்டனா்.

அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு டி.எஸ்.பி. தி.கோவிந்தசாமி மற்றும் நிறுவன பொது மேலாளா்கள் அருள், ஆனந்த்குமாா் உள்ளிட்டோா்

பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.