//

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணா்வு வாகன பிரசாரம் - மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:05 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/நகா்புற வாழ்வாதார இயக்கம்/ மகளிா் திட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ஆம் தேதி செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

முகாமில் 120-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு 7000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வை நடத்தி இளைஞா்களை தோ்வு செய்ய உள்ளனா். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் 18 முதல் 35 வயதுடைய வேலை நாடுநா்கள் மாா்பளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு ஆகியவற்றுடன் வரவேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன்,

இளநிலைவேலைவாய்ப்பு அலுவலா் மோகன்ராஜ், விஜயலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள்

கலந்து கொண்டனா்.

இந்த விழிப்புணா்வு பிரசார வாகனமானம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயக்கப்படவுள்ளது.