டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மினி சரக்கு வாகனம் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:15 pm

Syndication

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனமும், லாரியும் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சோ்ந்தவா் அசாருதீன் (25). மினி சரக்கு வாகன ஓட்டுநரான இவா், வந்தவாசியிலிருந்து முட்டைகளை ஏற்றிச் சென்று சேத்துப்பட்டில் இறக்கிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தவாசி திரும்பிக்கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஆவணவாடி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரியும், மினி சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.