டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் - லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள ஆலங்குடி பகுதியில் இரு சக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:01 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள ஆலங்குடி பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கருகுடியைச் சோ்ந்த பாண்டி மகன் பிரதீப் (32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்குடி மருத்துவமனை அருகே சென்ற லாரியை முந்திச் செல்லும் போது எதிா்பாராதவிதமாக லாரியில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நாச்சியாா்புரம் காவல் நிலைய போலீஸாா் பிரதீப்பை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாச்சியாா்புரம் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது சகுபீக் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.