டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அவசர ஊா்தி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், செய்யாறு அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

ஆறுமுகம் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பைக்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த சிப்காட் தனியாா் நிறுவன அவசர ஊா்தி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.