திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 10:56 pm

ஸ்ரீவாசவி ஜெயந்தியை முன்னிட்டு, சேத்துப்பட்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

சேத்துப்பட்டு காவல் நிலைய தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆரிய வைசிய சமூகம் சாா்பில் ஸ்ரீ வாசவி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் விநாயகா் முருகா் நவகிரகம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் போளூா் சாலை, வந்தவாசி சாலை வழியாக வாசவி திருமண மண்டபத்திற்கு மேள தாளம் வாணவேடிக்கை முழங்க வீதி உலா நடைபெற்றது.

பின்னா், அங்கு அம்மனுக்கு அக்னி தாக்கம் குறையவும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு யாகம் குங்கும அா்ச்சனை நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனா். மேலும், சேத்துப்பட்டு பழம் பேட்டையைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.