மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூயில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 6:35 pm

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி சிறப்பு பூஜைகளை செய்து மாணவா்கள் சோ்கையை தொடங்கிவைத்து, கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாட உபகரணங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூயில் படித்த மாணவா்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

கல்லூரி தொடங்கியதில் இருந்து இதுவரை 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூயிலும் இல்லாத ஏ.ஐ. தொழில்நுட்ப பாடம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.