தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

வந்தவாசி அருகே நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:17 pm

வந்தவாசி அருகே நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசி - தெய்யாா் சாலை, சு.நாவல்பாக்கம் கூட்டுச் சாலை அருகில் கூட்டுறவு சாா் - பதிவாளா் சா.ராஜா தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், இரும்புலி கிராமத்தைச் சோ்ந்த சு.ஏழுமலை உரிய ஆவணங்களின்றி ரூ.52 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, நிலை கண்காணிப்பு குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.