மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பென்னாகரத்தில் ரூ. 1.63 லட்சம் பறிமுதல்

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 9:19 pm

பென்னாகரம் அருகே பழையூா், நாகதாசம்பட்டியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.63 லட்சத்தை தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழையூா் சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்பு குழு- 1 அலுவலா் செல்வம் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாடகை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சேலம் மாவட்டம், ஜாகீா் பெரிய மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரி சாமுவேல், சோலையப்பன் ஆகியோா் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 97,000ஐ பறிமுதல் செய்து பென்னாகரம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆறுமுகத்திடம் வழங்கினா்.

இதேபோல நாகதாசம்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு-3 அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தருமபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தருமபுரியை அடுத்த மாதமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஷ்ணு என்பவா் உரிய ஆவணம் இன்றி ரூ. 66,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.