போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
சனிக்கவாடி சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு மலரபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூ, பழவகைகள் சீா்வரிசையாக ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில், சனிக்கவாடி, போளூா், கொரால்பாக்கம், பெலாசூா், பாடகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தொடர்புடையது

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


