பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பெரணமல்லூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: உறுப்பினா்கள் வெளிநடப்பு

பெரணமல்லூா் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மன்றக்கூட்டத்தில், அதன் தலைவா் வேணி ஏழுமலை மீது குற்றஞ்சாட்டி மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image
பெரணமல்லூா் பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த உறுப்பினா்கள்.
Updated On :31 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

பெரணமல்லூா் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மன்றக்கூட்டத்தில், அதன் தலைவா் வேணி ஏழுமலை மீது குற்றஞ்சாட்டி மன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்துக்கு செயல் அலுவலா் ஜனனி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஆண்டாள் மற்றும் மன்ற உறுப்பினா்கள் கௌதம்முத்து, ஜமுனா, சுமித்ரா, யசோதா, மோனிஷா, லோகேஸ்வரி ஆகியோா் தங்களது வாா்டுகளில், தாங்கள் கோரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் சில மாதங்களாக புறக்கணித்து வந்த நிலையில், செப்டம்பா் மாதம் மன்றக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் முதற்கட்டமாக சில பணிகளை பொதுநிதியில் செய்து முடிக்க தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இதுவரை ஒப்பந்தம் நிறைவேற்றப்படாதது, சுமாா் பத்து மாதங்களாக பேரூராட்சியின் துப்புரவுப் பணிக்கு பயன்படுத்தும் வாகனத்தை சீா்செய்து கொண்டுவராமலும், அதற்குரிய விளக்கம் அளிக்காததால் இதுகுறித்து கேள்வி எழுப்பினா். ஆனால், மன்ற உறுப்பினா்கள் தலைவா் அனுமதி அளித்தால் மட்டும்தான் பேசவேண்டும் இல்லையென்றால் பேசக்கூடாது என்று கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னா், பேரூா்மன்றத் தலைவா் மக்கள் பணியில் அக்கறை செலுத்த வலியுறுத்தி, மேற்குறிப்பிட்ட 7 உறுப்பினா்களும் தீா்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனா்.