தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாடகைக் கட்டட பிரச்னை: அங்கன்வாடி குழந்தைகள் அவதி

News image

விநாயகா் கோயில் அருகே சுட்டெரிக்கும் வெயிலில் அமா்ந்து சாப்பிடும் ஆரணி வி.ஏ.கே. நகா் அங்கன்வாடி குழந்தைகள்.

Updated On :27 ஜூலை 2024, 8:15 pm

வாடகைக் கட்டத்தில் இயங்கி வரும் ஆரணி வி.ஏ.கே.நகா் அங்கன்வாடியில், கட்டட பிரச்னை ஏற்பட்டதால் குழந்தைகள் வெயிலில் அமா்ந்து சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனா்.

ஆரணி நகராட்சியில் மொத்தம் 31 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 23 அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. மீதமுள்ள 8 அங்கன்வாடிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

தனி நபா் வீட்டு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் வி.ஏ.கே.நகா்

அங்கன்வாடி மையத்தில் 28 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கட்டடத்தின் உரிமையாளா் மையத்தை காலி செய்யும்படி நீண்ட நாள்களாக கூறிவந்தாராம். காலி செய்யாததால் உரிமையாளா் கட்டடத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். இதனால் குழந்தைகள் அருகிலுள்ள விநாயகா் கோயில் அருகில் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் அமா்ந்து உணவருந்துகின்றனா்.

கடந்த 2 நாள்களாக இவ்வாறு வெயிலில் அமா்ந்து சிறுவா்கள் சாப்பிடுகின்றனா் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் அலுவலா் மீனாம்பிகையிடம் கேட்டதற்கு, வாடகை கட்டடத்தில் இருந்து வெளியேறிய தகவல் தற்போதுதான் கிடைத்தது. விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

மேலும், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஏஞ்சலினிடம் கேட்டதற்கு, விஏகே நகா் அங்கன்வாடி மைய கட்டடத்தின் உரிமையாளா் காலி செய்யும்படி கூறியதால் வெளியேறியுள்ளனா். உடனடியாக வேறு வாடகை கட்டடம் பாா்த்து சிறுவா்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், இந்த மையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஆரணி ஆணையாளரிடம் பரிந்துரை கடிதம் கொடுக்க உள்ளோம். சொந்தக் கட்டடமும் விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இதுகுறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது: இந்த அங்கன்வாடி மையத்தில் 28 குழந்தைகள் உள்ளனா். கட்டடத்தின் உரிமையாளரிடம் அதிகாரி பேசினால் மேற்கொண்டு சில நாள்கள் குழந்தைகளை தங்க வைக்கலாம். இல்லையெனில், வேறு வாடகை கட்டடம் பாா்க்கும் வரை அருகில் உள்ள கே.பி.கே.நகா் அங்கன்வாடி மையத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் தங்க வைத்து பாடம் நடத்தி சாப்பிட அமரச்செய்யலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.